திருக்குறள்

1009.

அன்பொரீஇத் தற்செற் றறநோக்கா தீட்டிய ஒண்பொருள் கொள்வார் பிறர்.

திருக்குறள் 1009

அன்பொரீஇத் தற்செற் றறநோக்கா தீட்டிய ஒண்பொருள் கொள்வார் பிறர்.

பொருள்:

அன்பெனும் பண்பை அறவே நீக்கி, தன்னையும் வருத்திக் கொண்டு, அறவழிக்குப் புறம்பாகச் சேர்த்துக் குவித்திடும் செல்வத்தைப் பிறர் கொள்ளை கொண்டு போய் விடுவர்.

மு.வரததாசனார் உரை:

பிறரிடம் செலுத்தும் அன்பையும் விட்டுத் தன்னையும் வருத்தி அறத்தையும் போற்றாமல் சேர்த்து வைத்தப் பெரும் பொருளைப் பெற்று நுகர்பவர் மற்றவரே.

சாலமன் பாப்பையா உரை:

பிறர்க்கு ஈயாமல் அன்பை விட்டு விலகி, எதையும் அனுபவிக்காமல் தன்னை வருத்தி, அறத்தை எண்ணாது சேர்த்த பொருளை மற்றவர் அனுபவிப்பர்.